August 29, 2015

தமிழரசு கட்சியிலிருந்து நான் விலகமாட்டேன் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தகவல்!

தமிழரசு கட்சியிலிருந்து நான் விலகமாட்டேன், தர்மம் என்றோ ஒருநாள் வெல்லுமென தெரிவித்துள்ளர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்.

தேசியப்பட்டியல் மூலம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகலாமென எதிர்பார்க்கப்பட்ட பேராசிரியர் சிற்றம்பலம் இறுதி நேரத்தினில் வழமை போன்றே கழற்றிவிடப்பட்டுள்ளார்.
இந்நிலையினில் தனது ராஜினாமா பற்றி ஆலோசித்து வந்திருந்த சிற்றம்பலம் இது ஊடகங்களிற்கும் தகவல் வழங்கியிருந்தார்.
இந்நிலையினில் தமிழரசுக்கட்சி மாற்றத்திற்கான குரலாக ஒலித்த சிற்றம்பலத்தின் குரல் தொடர்ந்தும் ஒலிக்க வேண்டுமென ஆதரவாளர்கள் விடுத்த வேண்டுகோளை அடுத்தே தனது முடிவை அவர் மீள்பரீசிலித்ததாக தெரியவருகின்றது.

No comments:

Post a Comment