August 15, 2015

மட்டக்களப்பில் அதிகாலை வாகன விபத்து!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு பொலன்னறுவை பிரதான வீதியின் சத்துருக்கொண்டானில் இன்று சனிக்கிழமை அதிகாலை சிறிய ரக கென்டரொன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் உயிரழப்புக்கள் ஏற்படவில்லையென தெரிவித்த பொலிஸார், கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி தெம்பிலி ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த போது குறித்த கென்டர் வீதியியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment