June 5, 2015

தமிழ்த்தேசியத்துக்காக நெறிபிறழாது உழைத்த நாட்டுப்பற்றாளர் கந்தையா சிவராஜா அவர்களுக்கு எமது அகவணக்கம் - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி!

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழ் மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும்  அர்பணிப்புடன் பணிசெய்த  நாட்டுப்பற்றாளர் கந்தையா சிவராஜா அவர்கள் 31 .05 .2015 அன்று சுகவீனம் காரணமாகச்
சாவடைந்தார்.எண்ணற்ற தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் சுமந்துகொண்டு பயணிக்கும் எமது விடுதலைப் போராட்டத்தில் நாட்டுப்பற்றாளர் கந்தையா சிவராஜா அவர்களின்  அர்ப்பணிப்பும் செயற்பாடுகளும் முக்கியமானவை.

சவால்கள் மிகுந்த காலகட்டத்தில் தமிழ்த்தேசியத்துக்காக நெறிபிறழாது பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவுக்கு உறுதுணையாக நின்றவர்களில்
நாட்டுப்பற்றாளர் கந்தையா சிவராஜா அவர்கள் முதன்மையானவர் . தமிழீழ விடுதலைக்காய் அர்பணிப்புடனும் இதயசுத்தியுடனும் உழைத்தவர்கள் என்றும் போற்றப்பட வேண்டியவர்கள் .

அந்த வகையில் அமைதியாகக் கண் மூடியுள்ள  நாட்டுப்பற்றாளர் கந்தையா சிவராஜா  அவர்களை நினைவில் நிறுத்தி அகவணக்கம் செல்லுத்தும்  இவ்வேளையில் அவர் இழப்பால் தவிக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - யேர்மனி



தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

No comments:

Post a Comment