June 5, 2015

கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் ! கூட்டணிக் கட்சிகள் சம்பந்தனிடம் கோரிக்கை!

நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராவது குறித்துக் கலந்துரையாடுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கூட்டணிக் கட்சிகள் கோரிக்கை விடுக்கவுள்ளன.


யாழ்ப்பாணத்தில் கடந்த 2ம் நாள் சந்தித்துப் பேசிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், ரெலோ, ஈபிஆர்எல்எவ், புளொட் அகிய கட்சிகளின் தலைவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளன.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை நிறுத்துவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்டக் குழுவை, உடனடியாக கூட்ட வேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரிக்கை விடுக்கவும், இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படக் கூடிய சாத்தியங்கள் உள்ள நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment