June 5, 2015

சாவகச்சேரி நுனாவில் பகுதியில் கடைகள் , வீடுகளுக்கு கழிவு ஒயில் அபிசேகம் நடாத்தும் காவாலிகள் !

சாவகச்சேரி நுனாவில், மட்டுவில் பகுதிகளில் கடைகளுக்கும் வீட்டு மதில்களுக்கும் இனந்தெரியாதோர் கழிவு ஒயில்களை ஊற்றி வருவதாக தெரியவருகின்றது.


ஒரு மாதத்திற்கு இடையில் இப் பகுதியில் 3 இடங்களில் கழிவு ஒயில்கள் வீசப்பட்டுள்ளன. நுனாவில் பகுதியில் அடுத்தடுத்து இரு சலுான்களுக்கும் கழிவு ஒயில்கள் வீசப்பட்டுள்ளன.

அத்துடன் மட்டுவில் பகுதியில் உள்ள வீடுகள் சிலவற்றில் புதிதாகக் கட்டப்பட்டு வர்ணம் அடித்த மதில்களுக்கும் கழிவு ஒயில்கள் ஊற்றப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இக் கழிவு ஒயில் வீசுவதற்கான காரணங்கள் தெரியவில்லை எனவும் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment