May 9, 2015

மானிப்பாய் வாள்வெட்டு சூத்திரதாரி கைது!

மானிப்பாய் பகுதியினில் கடந்த மாதம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்திற்கு திட்டம் தீட்டிக் கொடுத்தார் என்ற சந்தேகத்தில் தெல்லிப்பளை அளவெட்டிப் பகுதியினை சேர்ந்த 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை நேற்று (08) மல்லாகம் நீதிமன்றிற்கு வெளியால் காத்துநின்ற மானிப்பாய்
பொலிஸார் கையும் மெய்யுமாக கைதுசெய்துள்ளனர்.

மேற்படி வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய அறுவர் கடந்த மாதம் 27ம் திகதி கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில ஏற்கனவே கைதானவர்களிடம் பெற்றுக்கொண்ட வாக்குமூலத்தின் பிரகாரம், இந்நபர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பிறிதொருவழக்கு ஒன்றிற்கு நீதிமன்றிற்கு சென்றுவிட்டு வருகையில் நீதிமன்றிற்கு வெளியில் காத்துநின்ற பொலிஸார் குறித்த நபரை கைதுசெய்துள்ளனர்.

கடந்தமாதம் (25) செல்லமுத்து மைதானத்தில் இடம்பெற்றிருந்த இசைநிகழ்ச்சியினை பார்வையிட்டு வந்த யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வாள்வெட்டு மேற்கொண்டிருந்தனர்.

இச் சம்பவத்தில் வவுனியா பகுதியினை சேர்ந்த ந.முரளிதரன் (23) என்ற மாணவனின் கை துண்டிக்கபட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், வவுனியாவை சேர்ந்த க.ரஜீவன் (வயது 23), முல்லைத்தீவை சேர்ந்த எஸ்.ஜெபர்ஸன் (வயது23) ஆகிய இருவரும் கடுமையான வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகி யாழ் போதனாவைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

No comments:

Post a Comment