May 9, 2015

சிறுபான்மை கட்சிகளின் பேரவை ஜனாதிபதியை சந்திக்கவுள்ளது-பேச்சாளர் மனோகணேசன் !

உத்தேச தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில், அடுத்த வாரம் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக, சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளின் பேரவை தெரிவித்துள்ளது.அதன் பேச்சாளர்
மனோகணேசன் இதனைக் கூறியுள்ளார்.உத்தேச தேர்தல் முறை மாற்றத்தால் சிறிய கட்சிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.ஏறகனவே இந்த பேரவை ஒன்று கூடி பல தீர்மானங்களை மேற்கொண்டிருந்தது. இதன்படி அந்த தீர்மானத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட யோசனைகளையும் ஜனாதிபதியிடம் கையளிக்கவிருப்பதாக மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment