May 9, 2015

பருத்தித்துறையில் கோரவிபத்து ;ஹாட்லி கல்லூரியின் முன்னாள் உப அதிபர் பலி ( படங்கள் இணைப்பு)



பருத்தித்துறையில் இருந்து மந்திகை நோக்கி சென்று கொண்டிருந்த மினி பஸ்சுடன் உந்துருளி மோதியதில் உந்துருளியில் சென்றவர் பலியாகியுள்ளார்.
பலியாகியவர் கனகசபாபதி-அருளானந்தம் (வயது 61). இவர் ஹாட்லி
கல்லூரியின் முன்னாள் உப அதிபராவார். இச் சம்பவம் பருத்தித்துறை 1ம் கட்டை சந்தியில் இடம்பெற்றுள்ளது.
இவர் வீதியில் திரும்பும் போது சிக்னல் கொடுத்துவிட்டு உடனடியாக திரும்பியுள்ளார் இதனை கவனிக்காத பஸ் சென்றதில் இவ் விபத்து நடை பெற்றுள்ளது.
பஸ்சையும் சாரதியையும் பருத்தித்துறை பொலிசார் கைது செய்துள்ளனர்.மரணமடைந்தவரின் சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment