May 8, 2015

10 கடவுச்சீட்டுக்களுடன் கொழும்பு வெள்ளவத்தையில் சிக்கிய பெண்!

கொழும்பு வெள்ளவத்தையில் 10 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளவத்தை புகையிரத நிலைய வீதியில் வைத்து இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் அதே பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் எனவும் அவரை இன்று கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாகவும் வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்
சம்பவம் குறித்து வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment