May 9, 2015

தமிழீழத் திரைப்படக்கலைஞர் கணேசு மாமா அவர்களின் 6ம் ஆண்டு நினைவுநாள் !


சிங்கள அரச பயங்கரவாத இராணுவத்தின் இன அழிப்பின் போது 09.05.2009 அன்று சிறிலங்கா அரச படைகளின் எறிகணைவீச்சில் ஈழத்துக்கலைவாணர் கணேசு மாமா உள்ளிட்ட பொதுமக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களின் 6ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும் 09/05/2015

‘ஈழத்து நாகேஷ்’ என தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு சிறந்த கலைஞரான கணேஷ் மாமா அவர்கள் 09.05.2009 அன்று சிறிலங்கா மேற்கொண்ட இன அழிப்புத் தாக்குதலில் பலியானார். போராட்டத்துக்காக ‘கலை’ வடிவில் போராடிய உண்மை கலைஞன்….எத்தனை படங்கள், குறும்படங்கள்…வறுமையில் வாடினாலும் போராட்டத்துடன் ஒன்றிப்போன, போராட்டத்துகாகவே வாழ்வை அர்ப்பணித்து கடைசிவரை உறுதியாக இருந்த உண்மை மனிதர்களில் இவரும் ஒருவர்.

ஈழத் தமிழர் மத்தியில் ஒளிர்விடும் கதிராக தோன்றுவர் நம் கணேஷ் மாமா.
காயப்பட்ட தமிழினத்தின் உள்ளங்களுக்கு நகைச்சுவை மருந்திட்ட கலைஞன் ! ‘ஈழத்து நாகேஷ்’ என தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு சிறந்த கலைஞரான கணேஷ் மாமா அவர்கள் 09.05.2009 அன்று சிறிலங்கா மேற்கொண்ட இன அழிப்புத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இதன்போது 3000ற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலையானது குறிப்பிடத்தக்கது.
போராட்டத்துக்காக ” கலை “ வடிவில் போராடிய உண்மை கலைஞன் .தாய் மண்ணின் நினைவில் பதித்த தடங்கல் நீள்கிறது. போராட்டத்தில் மற்றும் சிங்களவனின் எம் மக்கள் மீது திணிக்கும் வான் செயல்களுக்கு தத்துருவமான காட்சியாக நடித்து புலத்து மக்களிடம் சென்றடைந்து அவர்கள் புரிதலுக்கு ஏற்ற வகையில் செயல்திறன் கொண்டவரும் எத்தனை எத்தனை காவியப்போராளிகளின் – ஈழத்து தாய் தந்தையர்கள் , சகோதர சகோதரிகள் , மழலைகள் மனங்களில் நிறைந்தவர் என எம் வரலாறே கூறும். தண்டடக்கம் குறும்பு சிரிப்பு அனைவர் மனத்தையும் வசிகரிக்கும் பார்வை. வறுமையில் வாடினாலும் போராட்டத்துடன் ஒன்றிப்போன, போராடத்துகாகவே வாழ்வை அர்ப்பணித்து கடைசிவரை உறுதியாக இருந்த உண்மை மனிதர்களில் இவரும் ஒருவர்.
“நமது எதிர்கால சந்ததிக்கு, நாம் தலை குனிந்து பதில் சொல்லும் நிலைமை வந்து விடக்கூடாது”
எல்லோரும் மாமா என்று அழைப்பார்கள். நல்லதொரு மாமாவை, நல்லதொரு ஈழக் கலைஞனை இழந்தது மனதுக்கு ரொம்பவே வருத்தமளிக்கின்றது.தன் மண்ணில்தான் இருப்பேன். இறந்தாலும் அங்குதான் இறப்பேன் என்ற உறுதியோடு அவர் இருந்ததாக மூன்று நாளைக்கு முன்புதான் அறிந்திருந்தேன்.
கணேஷ் மாமாவின் நடிப்பும் அவரின் விடுதலைப்பற்று யாருக்கும் யாரும் சொல்லி தெரியவேண்டியதில்லை. மிக அண்மை காலம் வரையில் போராட்டகளங்களுக்கு மத்தியில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தாய் மண்ணின் நினைவோடு தாயகத்திலிருந்து மடிந்த இந்த கலைஞனுக்கு எனது வீரவணக்கம் எத்தனை வருடம் சென்றாலும் ஈழத் தமிழர் மத்தியில் ஒளிர்விடும் கதிராக தோன்றுவர் நம் கணேஷ் மாமா என்றுமே உங்கள் நினைவுகளை மனதில் சுமந்தவாறு பயணிக்கின்றோம்.
09.05.2009 அன்று 3000ற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலையானதும் குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கும் எமது அஞ்சலியை தெரிவிக்கின்றோம்.
நன்றி....

No comments:

Post a Comment