May 30, 2015

கரும்பலகையே இல்லாமல் இயங்கி வந்த கிளிநொச்சி பாடசாலை!

நவீன கல்வி பற்றியெல்லாம் உலகம் பேசிக் கொண்டிருக்க, கரும்பலகையே இல்லாமல் நடத்தப்பட்டு வந்த பாடசாலையொன்று பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமந்திரனின் முயற்சியால், அந்த பாடசாலைக்கு கரும்பலகை உள்ளிட்ட பல கற்றல் உபகரணங்கள் கிடைத்துள்ளன.

பூநகரி மட்டுவில்நாடு தெற்கு அ.த.க பாடசாலையே இப்படி மோசமான வளப்பற்றாக்குறைகளுடன் இயங்கி வந்துள்ளது. அங்கு 41 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். அரச பாடசாலையொன்று இப்படியான வளப்பற்றாக்குறையுடன் இயங்கி வந்த விடயம் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
சமூகஅக்கறை கொண்ட சில பெண்கள் கரும்பலகை மற்றும் அலுமாரியென்பனவற்றை நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடாக வழங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment