April 24, 2015

யாழ்ப்பாணம் வடமராட்சியில் தலையை சிலுப்பிக் கொண்டு திரிந்த மாணவிகள்! கடுப்பான அதிபர்!


யாழ்ப்பாணம் வடமராட்சியில் அமைந்துள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றாக நெல்லியடி மத்திய கல்லூரியில் சுவாரஸ்யமான சம்பவமொன்று அண்மையில் நடந்துள்ளது. இரண்டாம் தவணைக்காக பாடசாலை ஆரம்பித்த சமயத்தில், பாடசாலையிலிருந்து பல பெற்றோர்களிற்கு கடிதம் சென்றுள்ளது.

அனைத்து கடிதங்களும் மாணவிகளின் பெற்றோர்களிற்கே அனுப்பப்பட்டிருந்தன. அதில் குறிப்பிட்ட தினத்தில் அவர்களை பாடசாலைக்கு சமூகமளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தவணை முடிவில் குறைந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களின் பெற்றோர்களை தானே அழைப்பார்கள், இப்பொழுது எதற்காக அழைக்கிறார்கள் என தலையை பிய்த்துக் கொண்டு சென்ற பெற்றோர்களிற்கு தமது பெண் பிள்ளைகளின் தலைதான் காரணமென்பது தெரிய வந்தது.
நவநாகரிகமாக தலைமயிரை வெட்டும் மாணவிகள், அதனை பின்னலிடும் போது, தலையின் முன்பகுதியில் தொங்க விடுகெிறார்கள்.
அத்துடன், இப்படி வெட்டுவதால் பின்னலிற்கும் அகப்படாமல் மயிர்க்கற்றைகள் தனித்து நீட்டிக் கொண்டும் நிற்பதை பாடசாலை அதிபர் கப்டன் சேதுராஜா அவதானித்துவிட்டார்.
உடனடியாக பெற்றோர்களை அழைத்து, பிள்ளைகளை தலையை சிலுப்பிக் கொண்டு திரிய அனுமதிக்க வேண்டாமென கூறி அனுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment