August 20, 2016

ஜனாதிபதி தேர்தலின் போது பலகோடி ரூபா பேரம் பேசப்பட்டது:மனோகணேசன் காட்டம் !

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தமது முற்போக்கு கூட்டணிக்கு பலகோடி ரூபாய்கள் பணம் தருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அரசகரும மொழிகள் மற்றும் தேசியகலந்துரையாடல்துறை அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் புடவை வியாபாரிகளால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில்உரையாற்றிய அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

2005ம் ஆண்டில் விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுத்து வடக்கு கிழக்கு மக்களைவாக்களிக்காமல் செய்து அதன் மூலம் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியானார்.

எனவே இந்த தடவை வடக்கு கிழக்குக்கு வெளியேயுள்ள தமிழர்களின் வாக்குகளை மனோ கணேசன்ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டால் பெறமுடியும்.

அதைப்போன்று வடக்கு கிழக்குக்கு வெளியில் உள்ள தமிழர்களின் வாக்குகளை சிதறடித்துவெற்றிபெற முயற்சிக்கப்பட்டது என்று மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அதற்கு இணங்காமல் நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளித்தாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment