August 2, 2016

மஹிந்த – கோட்டாவிற்கு எதிராக சர்வதேச விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் போர்க்குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட்டு நீதி நிலை நாட்டப்பட வேண்டும் எனவும் வடக்கு மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.


தேசிய அரசாங்கத்தினால் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் முயற்சியாக, நடைமுறைப்படுத்தப்படும் நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் அமர்வில் கலந்து கொண்ட வடக்கு மக்களே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பில் அவர்கள் தொடர்ந்தும் தெரிவிக்கையில், விடுதலை புலிகளுடனான இறுதி யுத்தத்தின்போது அரச படைகள் கொத்து குண்டு தாக்குதல் நடத்தி பல்லாயிரம் கணக்கான மக்களைக் கொன்று குவிக்க, மஹிந்தவும் கோட்டாவுமே காரணம் என்றும் குற்றஞ்சாட்டினார்கள்.

எனவே இவ்வாறான குற்றவாளிகளை தண்டிப்பதற்கு சர்வதேச நீதிமன்றமே ஒரே வழி என்று குறிப்பிடும் வடக்கு மக்கள், அவர்களுக்கு தண்டனை வழங்கினால்தான் நாட்டில் இனவாதம் ஒழிந்து உண்மையான நல்லிணக்கம் ஏற்படும் என்றும் கூறினர்.

No comments:

Post a Comment