August 11, 2016

வவுனியா செட்டிக்குளத்தில் புதையல் தோண்டிய நால்வர் கைது!

வவுனியா செட்டிக்குளத்தில் புதையல் தோண்டிய நால்வர் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

செட்டிக்குளம் அரசடிக்குளம் பகுதியில் நேற்று ( 10.08.2016) அகழ்வுப்பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள்அநூராதபுரம்,முதலியார்குளம்,நேரியகுளம் ஆகிய பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடம் இருந்து புதையல் தோண்ட பயன்படுத்திய ஆயுதங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

No comments:

Post a Comment