திருகோணமலை – முதலியார் குளம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவரை நேற்று (18) கைது செய்துள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் திருகோணமலை – முதலியார்குளம் பகுதியைச் சேர்ந்த கஹதல ஆராச்சிலாகே சிறிபால மணபந்து (62 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
50 வயதுடைய மனநிலை பாதிக்கப்பட்ட உறவினர் ஒருவர் தனது வீட்டிற்கு அருகில் வசித்து வருவதாகவும், அந்தப் பெண்ணையே குறித்த நபர் பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்டவரின் உறவினரான இந்துரானி முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட மொறவெவ பொலிஸார் இந்த நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (19) திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணை சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் திருகோணமலை – முதலியார்குளம் பகுதியைச் சேர்ந்த கஹதல ஆராச்சிலாகே சிறிபால மணபந்து (62 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
50 வயதுடைய மனநிலை பாதிக்கப்பட்ட உறவினர் ஒருவர் தனது வீட்டிற்கு அருகில் வசித்து வருவதாகவும், அந்தப் பெண்ணையே குறித்த நபர் பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்டவரின் உறவினரான இந்துரானி முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட மொறவெவ பொலிஸார் இந்த நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (19) திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணை சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment