July 31, 2016

இனவாதத்தை எட்டியுள்ள மகிந்தவின் நடைபயணம் -கஜேந்திரகுமார்!

மகிந்தவின் நடைப்பயணம் தெற்கில் இனவாத உச்சத்தை எட்டியிருக்கின்றது. ஆனால் மகிந்தவை காரணங்காட்டி தமிழ் மக்களது பிரச்சினைகளை கைவிடப்போகின்றோமாவென கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இது பற்றி மேலும் தெரிவிக்கையினில் தமிழரசு கட்சி தலைவர் சொல்கிறார் மகிந்தவின் நடைபயணத்தை தோற்கடிக்க வேண்டுமென்கிறார்.
ஆனால் மகிந்தவை இந்த அரசு தான் பாதுகாக்கின்றது.
வெற்று கோசங்களை காட்டி மகிந்தவை முன்னிறுத்தி அரசை காப்பாற்றுவது கூட்டமைப்பே.அவர்களே இப்போது தமிழ் மக்களிற்கு பதில் கூற வேண்டியவர்களாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த அரசும் தமிழ் மக்களிற்கு அரசியல் தீர்வையோ வேறு எதனையுமோ தயாராக இல்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment