June 1, 2016

மஹிந்தவின் கையில் ஏன் மந்திரசாவி..?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ எந்நேரமும் கையில் வைத்திருக்கும் யந்திரம் ஒன்று தொடர்பில் கடந்த காலங்களில் வெவ்வேறு கருத்துக்கள் வெளியாகியிருந்தன.


இதேவேளை, நேற்று இடம்பெற்ற தொலைக்காட்சியின் அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குறித்த யந்திரம் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.

தனது தந்தையிடம் இருந்த யந்திரம் மந்திரசக்தியை கொண்டதில்லை என அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.

குறித்த யந்திரத்தை சிறிது காலம் தான் பாவித்த போதும் பின்னர் அதனை கைவிட்டதாக அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment