June 24, 2016

அரியநேத்திரனை விசாரணைக்கு அழைக்கிறது சிஐடி!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 27ம் திகதி விசாரணை ஒன்றிற்காக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு விசாரணைக்கு வருமாறு தமது இல்லத்திற்கு வந்து பொலிசார் அழைப்பாணையை வழங்கியதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

 
கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் எதற்காக அழைத்துள்ளார்கள் என்பது தனக்கு தெரியாது எனவும் கடந்த காலங்களிலும் இது போன்று பல தடவைகள் தன்னை கொழும்பிற்கு விசாரணைக்காக இவர்கள் அழைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment