June 30, 2016

விடுதலை புலிகளின் பதுங்கு குழி வளாகத்தில் தேடுதல் வேட்டை!

வடமராட்சி இராமநாத புரத்தில் சற்று முன்னர் பொலிஸார் தோண்டுதல் நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளனர்.


விடுதலை புலிகளின் பதுங்கு குழி உள்ள பகுதியில் இந்ந தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இனம் தெரியாதவர்களினால் விடுதலை புலிகளின் பதுங்கு குழி உள்ள பகுதியின் வளாகத்தில் தோண்டுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விட்டு செல்லப்பட்டுள்ளது.

தகவல் அறிந்த பொலிஸார் குறித்த பகுதியில் என்ன உள்ளது என்பதனை ஆராய்வதற்காகவே இந்த தோண்டுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

மேலும், குறித்த தேடுதல் வேட்டையில் கிளிநொச்சி பொலிஸார், குற்றத்தடவியல் பொலிஸார் மற்றும் இராமநாதபுர பொலிஸார் இணைந்து சற்று முன்னர் ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, விடுதலை புலிகளின் பதுங்கு குழி வளாகத்தில் இரண்டு இடங்களில் சந்தேக நபரிகளினால் தோண்டப்பட்டு விட்டுச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேடுதல் வேட்டை தோல்வி!

குறித்த தேடுதல் வேட்டையில் கிளிநொச்சி பொலிஸார், குற்றத்தடவியல் பொலிஸார் மற்றும் இராமநாதபுர பொலிஸார் இணைந்து நடத்தி இருந்த போதிலும் எதுவும் மீட்க்கப்படாமையினால் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.





No comments:

Post a Comment