June 26, 2016

நெடுங்கேணி பொதுச்சந்தை சுற்றுச் சூழல் சுகாதாரமற்ற நிலையில் ; சுத்தப்படுத்தி தரும் படி பொதுமக்கள் கோரிக்கை!

நெடுங்கேணி பொதுச்சந்தை  சுற்றுச்  சூழல் சுகாதாரமற்ற  நிலையில் காணப்பட்டுள்ளது.


நெடுங்கேணி பிரதேசசபைக்குட்பட்ட பொதுச்சந்தை சுற்றுச்சூழல் அனைத்தும் பத்தைகளாகவும் செடிகளும் மூடி குப்பைகளும் காணப்படுகின்றது. இச் சபைக்கு போதிய ஆளணிகளிருந்தும் வாகன வசதிகளிருந்தும் சரியான முறையில் புதிய பிரதேச சபைச் செயலாளரினால் காண்காணிப்பதில்லை.

இதனால் சுகாதாரமற்றநலையில் காணப்படுகின்றது.  சந்தை வியாபாரிகளிடமிருந்து உரிய நேரத்தில் வாடகைகள் அறவிடப்பட்டாலும் அதே கவனத்திற்கு சுற்றுச் சூழல்களையும் சுத்தப்படுத்துவதில்லை.

இந்த இடங்கள் நெடுங்கேணி சுகாதார பரிசோதகர்களும் நேரடியாக அவ்விடங்களை பார்வையிட்டதோடு இதற்கான  நடவடிக்கைகளும் விரைவாக  மேற்கொள்ளப்படும்  எனவும் அவர் தெரிவித்தள்ளார்.

சம்மந்தப்பட்டஅதிகாரிகள் கவனத்திற் கொண்டுவந்து இவ்விடங்களை விரைவாக சுத்தப்படுத்தி மக்களின் பாவனைக்கு  தரும்படி  பொதுமக்கள் கோரிக்கை விடுத்தள்ளமை குறிப்பிடத்தக்கது.






No comments:

Post a Comment