June 26, 2016

அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட மைத்திரிக்கு அழுத்தம்!

2020ஆம் ஆண்டு நடக்கவுள்ள அடுத்த அதிபர் தேர்தலில், மீண்டும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன போட்டியிட வேண்டும் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ வதிவிடத்தில், கடந்த திங்கட்கிழமை இரவு இந்தக் கூ்ட்டம் இடம்பெற்றது.

இதில், அமைச்சர் டிலான் பெரேரா, 2020ஆம் ஆண்டு நடக்கவுள்ள அடுத்த அதிபர் தேர்தலிலும், மைத்திரிபால சிறிசேன போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மிகப் பொருத்தமான வேட்பாளர் சிறிலங்கா அதிபர் தான் என்று அந்தக் கோரிக்கைக்கு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும் ஆதரவு தெரிவித்தார்.

எனினும், இந்த விடயத்தில் தமது முன்னைய முடிவில் இருந்து தாம் மாறப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக கூறியுள்ளார்.

No comments:

Post a Comment