June 21, 2016

பிரித்தானிய தமிழ் மக்களின் விருப்பத்தில் தலையீடு இல்லை!- உலக தமிழர் பேரவை!

பிரித்தானியாவிலுள்ள தமிழர்கள் மத்தியில் உலக தமிழர் பேரவை, இந்த கருத்துக்கணிப்புதொடர்பில் பிரசாரங்களை மேற்கொள்ளாது என பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன்தெரிவித்துள்ளார்.


ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா தொடர்ந்து இருக்க வேண்டுமா? அல்லது இல்லையா?என்பதை தீர்மானிக்க வேண்டியது பிரித்தானிய மக்களின் தனிப்பட்டவிருப்பத்துக்குட்பட்டவிடயமாகும்.

எனவே, அந்த விருப்பத்தில் செல்வாக்கை செலுத்த தமது பேரவை விரும்பவில்லை என்றும்சுரேந்திரன் இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு குறிப்பிட்டார்.

இந்தநிலையில் தனிப்பட்;ட தமது கருத்தின்படி, 28 உறுப்பினர் நாடுகளை கொண்டஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா இணைந்திருப்பதே நன்மை பயக்கும் என்றும்சுரேந்திரன் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பும் இதே நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment