September 29, 2015

யாழில் திருநெல்வேலியில் தொடரும் ரவுடிகளின் ராஜ்ஜியம்

சிகரட் வழங்க தாமதமானதால் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள கடையொன்றின் முதலாளியும் தொழிலாளியும் ரவுடிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
நேற்றிரவு இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பில் யாழ் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,
மேற்குறிப்பிட்டுள்ள பகுதியிலுள்ள பலசரக்கு கடையொன்றில் நேற்று இரவு மதுபோதையில் வந்த இளைஞர்கள் குழுவினர் சிகரட் வழங்குமாறு கடை உதவியாளரிடம் கேட்டுள்ளனர்.
வியாபாரம் அதிகம் நடைபெறும் நேரம் என்கிற படியால் சிகரட் வழங்க தாமதமாகியுள்ளது,
இதனால் ஆத்திரமடைந்த குறித்த இளைஞர்கள் கடையின் உதவியாளரை தாக்கியுள்ளனர்.
இதை தடுக்க வந்த கடையின் உரிமையாளரையும் அவர்கள் தாக்கிவிட்டு அவ்விடத்தலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தை நேரில் கண்டவர்களின் தகவலினடிப்படையில் பொலிசார் குறித்த இளைஞர்களின் பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டும் அவர்கள் சிக்கவில்லை.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment