September 14, 2015

இனவிருத்தி சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு!(படங்கள் இணைப்பு)

இனவிருத்தி சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை 10.00 மணிக்கு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு கிராம அலுவலர் அலுவலகத்தில் இக்கருத்தரங்கு ஆரம்பமாகியது.
கொழும்பு யாஎல பிரதேசத்தை தலைமையகமாக கொண்டியங்கும் பெண்கள் மத்தியஸ்தானம் என்ற அமைப்பினர் இச் செயலமர்வை ஒழுங்குபடுத்தி நடாத்திவருகின்றனர்.
வவுனியா மன்னார் புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் இந்த அமைப்பினருடைய குழுக்கள் இயங்கி வருவதாகவும் இதில் ஒரு குழுவாகிய தமது புதுக்குடியிருப்பு குழுவிலுள்ள 25 அங்கத்தவர்களுக்கே இன்றய தினம் இந்த பயிற்சி நெறி இடம்பெறுவதாகவும்,
இவர்களுக்கு ஏற்கனவே பெண்கள் உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவம் தொடர்பான பயிற்சி நெறிகளும் தங்களால் வழங்கப்பட்டுள்ளதாகவும் பெண்கள் மத்தியஸ்தானம் என்ற அமைப்பின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment