September 24, 2015

அறிக்­கையில் கூறப்­பட்­டுள்ள விட­யங்கள் முழு­மை­யாக அமுல்படுத்தப்பட வேண்டும்!சுரேஷ் பிரே­ மச்­சந்­திரன்!

இலங்­கையில் இடம்­பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமைமீறல்­கள், மனி­தா­பி­மானச் சட்டங்கள்   தொடர்­பாக ஐ.நா. அறிக்கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள கலப்பு விசேட நீதி­மன்றம் உள்­ளிட்ட அனைத்து பரிந்துரைகளும் நடை
­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­ வேண்டும் என வலி­யு­றுத்­தி­யுள்ள பர­குவே மற்றும் எஸ்டோ­னியா நாடுகள் அதற்கு தாம் முழு­மை­யான பங்­க­ளிப்பை வழங்­க­வுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்­ளன.ஜெனி­வா­வுக்கு விஜயம் செய்­துள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சியின் தலை­வ­ரான சுரேஷ் பிரே­ மச்­சந்­திரன், மற்­றொருபங்­கா­ளிக்­கட்­சி­யான ரெலோவின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்கு பொறுப்­பா­ன­வரும், வட­மா­காண சபை உறுப்­பி­ன­ரு­மான சிவா­ஜி­லிங்கம், புலம் பெயர் அமைப்­புக்­களின் மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்கள் உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்கள் அடங்­கிய தமிழ்த் தரப்பு குழு­வி­ன­ருக்கும் பர­குவே நாட்டின் பிரதி வெளிவி­வ­கார அமைச்சர் மற்றும் எஸ்­டோ­னியா நாட்டின் வெளிவி­வ­கார அமைச்சர் ஆகி­யே­ருக்­கு­மி­டையில் சந்­திப்­பொன்று நேற்று முன்­தினம் ஐ.நா. காரி­யா­லய வளா­கத்தில் இடம்­பெற்­றது.
இச்­சந்­திப்­பின்­போதே மேற்­கண்­ட­வாறு அந்­நாட்டு பிர­தி­நி­தி­களால் வலி­றுத்­தப்­பட்­டுள்­ளது. குறித்த சந்­திப்பு தொடர்­பாக ஜெனீ­வா­வி­லுள்ள ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் தலைவர் சுரேஷ்­பி­ரே­மச்­சந்­திரன் கேச­ரிக்கு கருத்து தெரி­விக்­கையில்,மத்­திய தெற்கு அமெ­ரிக்க நாடான பர­கு­வேயின் பிரதி வெளிவி­வ­கார அமைச்­ச­ரையும், வடக்கு ஐரோப்­பிய நாடான எஸ்­டோ­னி­யாவின் வெ ளிவி­வ­கார அமைச்­ச­ரையும் நாம் சந்­தித்­தி­ருந்தோம்.இச்­சந்­திப்­பின்­போது இலங்­கையில் இடம்­பெற்றுள்ளதாக கூறப்படும் மனித குலத்­திற்கு எதி­ரான மீறல்கள், குற்­றங்கள், சட்ட மீறல்கள் தொடர்­பாக நாம் சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்­றையே கோரி­வந்தோம். ஆனால் தற்­போது ஐ.நா மனித உரிமை ஆணை­யாளர் அலு­வ­ல­கத்­தினால் விசா­ரணை மேற்­கொண்டு தற்­போது வெளியிட்­டுள்ள அறிக்­கையில் சர்­வ­தேச நீதி­ப­திகள், சட்­டத்­த­ர­ணிகள், விசா­ர­ணை­யா­ளர்­க­ளையும் உள்­ள­டக்­கிய கலப்பு விசேட நீதி­மன்றம் உரு­வாக்­கப்­பட்டு விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டு­மென கூறப்­பட்­டுள்­ளது.
அவ்­வா­றான நிலையில் அர­சாங்கம் அதனை நிரா­க­ரிப்­ப­தாக கூறு­வ­தோடு உள்­ளக விசா­ர­ணையை முன்­னெ­டுக்­கப்­போ­வ­தாக அறி­வித்­துள்­ளது. எம்­மைப்­பொ­றுத்­த­வ­ரையில் உள்­ளக விசா­ர­ணையை ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது. அது சுயா­தீனத் தன்­மை­யாக பக்­கச்­சார்­பின்றி நியா­ய­மாக இடம்­பெ­றுமா என்ற பிரச்­சினை உள்­ளது. அதற்கு எமக்கு கடந்த காலத்தில் பல அனு­ப­வங்கள் உள்­ளன. ஆகவே ஐ.நா அறிக்­கையில் சிபார்சு செய்­யப்­பட்­டுள்ள கலப்பு விசேட நீதி­மன்ற பொறி­மு­றையை அமைத்து விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் எனக் கோரினோம்.
அவ்­வி­ட­யங்­களை கவ­ன­மெ­டுத்த குறித்த இரு­நாட்டின் பிரதிநிதிகளும் ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் எனத் தெரிவித்ததுடன் அதற்காக தாம் முழுமையான பங்களிப்புக்களை வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டனர் என்றார். அத்துடன் தொடர்ச்சியாக இவ்வாறாக பல்வேறு சந்திப்புக்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment