September 27, 2015

வாழைச்சேனை ஆற்றில் குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கிரான் பூலாக்காடு பிரம்படித்தீவு ஆற்றில் மட்டி எடுக்கச் சென்ற குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தார். பூலாக்காடு பிரம்படித்தீவைச் சேர்;ந்த பத்மநாதன் சிவரூபன் (வயது 25) என்பவரே நீரில் மூழ்கி உயிரிழந்தவர் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.
இவர் இன்று காலை 9 மணியளவில் வீட்டிலிருந்து தொழில் நிமிர்த்தம் பிரம்படித்தீவு ஆற்றில் மட்டி எடுப்பதற்காக இன்னும் இவருடன் சென்ற மூன்று பேரும் தனித் தனியாக மட்டி எடுத்துக் கொண்டிருந்த வேளை இவர் ஆற்றுச் சுரியில் புதைந்து நீரில் மூழ்கியுள்ளார்.
அதே சமயம் அருகில் நின்றவர்களின் உதவியுடன் அவரைக் காப்பாற்றி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் மரண விசாரணைகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள

No comments:

Post a Comment