September 13, 2015

ரணில் இந்திய விஜயத்தை முன்னிட்டு மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்யத் தீர்மானம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தை முன்னிட்டு இந்நாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 16 இந்திய
மீனவர்களை விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரு நாட்டுக்கும் இடையிலான சிறந்த நட்பு மற்றும் மனிதாபிமான நல்லெண்ண அடிப்படையில் இந்திய மீனவர்களை விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் தமிழ்நாட்டு மீனவர்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment