July 5, 2015

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை கருத்தடை போல உபயோகிக்க கூட்டமைப்பு முடிவு!

தமிழர்களை தங்களது காதலிகளாக கருதும் கூட்டமைப்பு அக் காதலிகளுடன் உறவாடுவதற்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்களைக் கருத்தடைப் பைக்கட் போல் உபயோகிக்க முற்பட்டுள்ளது.

தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை, வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபைக்கு சுயாட்சி போன்ற ஏராளமான நிறைவேற்றாத வாக்குறுதிகளைக் கொடுத்து அதனை நிறைவேற்றாது இருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மீது மக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு மேலும் எவ்வாறு ஏமாற்றி தாங்கள் அவர்களுடன் உறவாடி காரியத்தைச் சாதிக்கலாம் என்ற நோக்கில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு களத்தில் இறங்கியுள்ளது.
வழமையாகவே தாங்கள் தமிழ்மக்களுடன் உறவாடுவதற்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஏனைய பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ் மாணவர்களை ஏணிகளைகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் தற்போதும் அவர்களுக்கு  மூளைச்சலவை செய்தும் வருகின்றது. தாம் ஒருபோதும் செய்ய விரும்பாத செய்ய முடியாத ஒன்றை அதாவது ‘பாராளுமன்ற ஆசன ஒதுக்கீடு ஒன்று தருவோம்‘ என்ற பொய்ப் பிரச்சாரத்தைத் தற்போது பல்கலைக்கழக இளைஞர்களை நோக்கி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இவர்களது இத்தகைய நடைமுறைச் சாத்தியமற்ற செயற்பாடே அரசியல் ரீதியாக இவர்கள் அடைந்துள்ள பலவீனத்தையும், தமது சாயம் தமிழ் மக்களிடம் வெளுத்துப் போய்விட்டது என்ற பயத்தையும் எமக்கு எடுத்தியம்பியுகின்றது.
அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களை அப்பாவித் தமிழர்களுடன் நெருங்கி உறவாடுவதற்கான ஒரு கருவியாகவே கூட்டமைப்பு வைத்துள்ளது என்பதையும் பல்கலைக்கழக மாணவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். 

No comments:

Post a Comment