திடீர் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் தெல்லிப்பழை வைத்தியாசலை வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் ஈடுபட்டார்கள்.
இன்று காலை மூன்று மணி நேரம் வேலைப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டார்கள்.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றிய பல்வேறு தரத்திலான சிற்றூழியர்களும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வேலையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் தமது வேலையை மீள வழங்கக்கோரியே வைத்திசாலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரால் வட மாகாண சுகாதார அமைச்சரின் கூற்றுக்கு எதிராக பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு வேலை மீள வழங்கப்படமாட்டாது என ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று வைத்தியசாலையின் அனைத்து ஊழியர்களும் மூன்று மணித்தியாலம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டார்கள்.
தொடர்ந்து இந்த ஊழியர்களின் பணி வைத்தியசாலைக்கு அவசியமாக இருப்பதினால் இவர்களின் நியமன விடயத்தில் உரியவர்கள் கவனம் செலுத்தவேண்டும் எனவும் இல்லாவிட்டால் வைத்தியசாலையின் பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறமிருக்க, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வைத்தியசாலைக்கு சென்று பகிஷ்கரிப்பில் ஈடுபட்டவர்களுடனும், வைத்தியர்களுடனும் கலந்துரையாடிதுடன் இது தொடர்பான பிரச்சினைக்கு உரிய தீர்வைபை் பெற்றுத் தருவதாக தெரிவித்திருக்கின்றார்.
No comments:
Post a Comment