May 14, 2015

சிறுபான்மை கட்சிகளின் யோசனைகள் நிராகரிக்கப்பட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை - மனோகணேசன்!

உத்தேச தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில் சிறுபான்மை கட்சிகள் முன்வைத்த யோசனைகள் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஜனநாயக மக்கள் முன்னணி எச்சரித்துள்ளது.

 அதன் தலைவர் மனோகணேசன், உள்நாட்டு வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் கூறியுள்ளார். 

புதிய தேர்தல் திருத்தச் சட்டத்துக்கான தமது பங்கு யோசனைகளை மனோகணேசன் தலைமையில் மூன்று அரசியல் கட்சிகள் நேற்றையதினம் ஜனாதிபதியிடம் கையளித்தன.

அத்துடன் ஏனைய சிறுபான்மை கட்சிகளும் இதற்கான யோசனைகளை முன்வைத்துள்ளன. 

இந்த நிலையில் குறித்த யோசனைகள் உள்ளடக்கப்பட்டே தேர்தல் திருத்தச் சட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என்று மனோகணேசன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment