May 28, 2015

ஜனாதிபதி மைத்திரியின் யாழ்.விஜயத்தின் போது செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு.!

யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் புதன்கிழமை திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குபற்றிய நிகழ்வுகள் தொடர்பான செய்திகளைச் சேகரிப்பதற்கு
ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுக் காலை யாழிற்குத் திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.இந்த நிலையில் ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வுகள் தொடர்பாச் செய்திகள் சேகரிப்பதற்கு ஜனாதிபதி ஊடகப் பிரிவினர் மாத்திரமே அநுனுமதிக்கப்பட்டிருந்தனர்.
மேலும் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் எதுவித அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினரால் அனுமதி மறுக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்பு கொண்ட போதும் அனுமதி கிடைக்காமையால் ஊடகவியலாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.

No comments:

Post a Comment