மண்டூரில் மதிதயன் என்ற அரச உத்தியோகத்தரை நவீனரக
துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கொலையாளிகளை ஒரு வாரகாலத்திற்குள்
கண்டுபிடிக்காவிட்டால், கிழக்கில் போராட்டங்களை நடாத்தப் போவதாக தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மட்டக்களப்பில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் கூறுகையில், மண்டூரில் பட்டப்பகலில் அதிநவீன மைக்ரோரக கைத்துப்பாக்கியை பாவித்து அரச உத்தியோகத்தரான மதிதயன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இவரின் கொலையானது கிழக்கு மாகாணத்தில் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது எனவே சூத்திரதாரிகளை ஒரு வாரகாலத்திற்குள் பாதுகாப்பு தரப்பினர் கண்டுபிடிக்கவேண்டும்.
ஒரு வாரகாலத்திற்குள் கொலையாளிகளை கண்டுபிடித்து கொலைக்கான காரணங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தாவிட்டால் கிழக்கில் உள்ள மக்களுடன் இணைந்து போராட்டங்களை நடாத்துவதற்கு நாங்கள் தயாராகிவருகின்றோம்.
இன்றைய தினம் போராட்டம் நடாத்துவதற்கு நாங்கள் தயாரான போதும்,பாதுகாப்பு தரப்பினருக்கு அவகாசத்தை வழங்கி ஒருவாரகாலத்திற்கு பின்னர் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
அதாவது கொலையாளிகளை அரசாங்கம் கண்டுபிடிக்கின்றதா? அல்லது அதனை இழுத்தடிக்கின்றதா? அல்லது அக்கறையின்றி செயற்படுகின்றதா என்பதை கருத்தில்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் காலங்களில் செயற்படுமென தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் கூறுகையில், மண்டூரில் பட்டப்பகலில் அதிநவீன மைக்ரோரக கைத்துப்பாக்கியை பாவித்து அரச உத்தியோகத்தரான மதிதயன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இவரின் கொலையானது கிழக்கு மாகாணத்தில் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது எனவே சூத்திரதாரிகளை ஒரு வாரகாலத்திற்குள் பாதுகாப்பு தரப்பினர் கண்டுபிடிக்கவேண்டும்.
ஒரு வாரகாலத்திற்குள் கொலையாளிகளை கண்டுபிடித்து கொலைக்கான காரணங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தாவிட்டால் கிழக்கில் உள்ள மக்களுடன் இணைந்து போராட்டங்களை நடாத்துவதற்கு நாங்கள் தயாராகிவருகின்றோம்.
இன்றைய தினம் போராட்டம் நடாத்துவதற்கு நாங்கள் தயாரான போதும்,பாதுகாப்பு தரப்பினருக்கு அவகாசத்தை வழங்கி ஒருவாரகாலத்திற்கு பின்னர் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
அதாவது கொலையாளிகளை அரசாங்கம் கண்டுபிடிக்கின்றதா? அல்லது அதனை இழுத்தடிக்கின்றதா? அல்லது அக்கறையின்றி செயற்படுகின்றதா என்பதை கருத்தில்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் காலங்களில் செயற்படுமென தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment