May 28, 2015

யாழ் நாராந்தனையில் சிறுமி மீது துஸ்பிரயோகம்!

யாழ்ப்பாணம் - நாராந்தனை - தம்பிரான்தோட்டம் பகுதியில் 23 வயது இளைஞனால் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு வந்த 13 வயது சிறுமி ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.


அவர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெற்றோரிடம் இருந்து பிரிந்து பாட்டியுடன் தனித்து வசித்து வந்த இந்த சிறுமி, குறித்த இளைஞனால் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்ப்பட்டு வந்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த இளைஞன் தலைமறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment