April 11, 2015

விவாகரத்துக் கோரிய மனைவி மீது கணவன் தாக்குதல் - உடுவில் பகுதியில் சம்பவம்!

சுன்னாகம் உடுவில் பகுதியில் குடிபோதையில் மனைவியை தாக்கிய 35 வயதுடைய குடும்பஸ்தரை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட பதில் நீதவான் கே.அரியநாயகம் வெள்ளிக்கிழமை (10) உத்தரவிட்டதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.


மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் மேற்படி இருவருக்கும் இடையிலான தாபரிப்பு வழக்கு நடைபெற்று வரும் நிலையில், வியாழக்கிழமை (09) குடிபோதையில் மனைவியின் வீட்டுக்கு சென்ற குடும்பஸ்தர் மனைவியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகநபரான கணவனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை பதில் நீதவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
குறித்த நபர் ”என்னை விட்டு விட்டு யாருடன் ------ போகின்றாய்?” எனக் கேட்டே தாக்குதல் நடாத்தியதாக மனைவி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment