April 10, 2015

அகதிகள் விடயத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கம் அரசியல் நலனுக்காக நீதித்துறையை மாற்றியமைத்துள்ளது!

அகதிகள் விடயத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கம் அந்த நாட்டின் நீதித்துறையை தமக்கு சாதகமான வகையில் மாற்றி அமைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
அவுஸ்திரேலியாவின் ஊடகம் ஒன்று இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

 
சதா எதிர்கொள்கின்ற அச்சுறுத்தல்கள், உயிராபத்துக்கள் காரணமாகவே சிறிலங்கா போன்ற நாடுகளில் இருந்து அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு பிரவேசிக்கின்றனர்.
 
ஐந்து வருடங்களுக்கு முன்னர் கூட அவர்களுக்கு அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்டது.
 
ஆனால் தற்போதைய அரசாங்கம் தங்களின் அரசியல் தேவைக்காக அகதிகளுக்கு எதிராக சட்டங்களை மாற்றிக் கொண்டுள்ளது.
 
இது பாரிய மனித உரிமை மீறல் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment