April 17, 2015

தமிழ் பெண்ணை மணப்பதற்காக முஸ்லீம் இளைஞன் இந்து மதத்தை தழுவினார் ( படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவு கொடுவாமடு காளி கோயில் வீதி கிராமத்தில் வசிக்கும் சுதாகரன் சுதாராணி என்பவருக்கும் , பொத்துவில் அல் நஜாத் வீதியில் வசிக்கும் அஸ்கார் லெப்பை இல் முபீன் என்பவருக்கும் கொடுவாமடு ஸ்ரீ களிகாமாடு விநாயகர் ஆலயத்தில் செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர் செல்லம் க . மோகன் தலைமையில் திருமணம் நடைபெற்றது .

குறித்த மணமகன் இஸ்லாமிய மதத்தில் இருந்து இந்து மதத்தை தழுவி சிவகணேசன் என்று பெயர் மாற்றப்பட்டு திராவிடர் பாரம்பரிய முறையாக காத்து குத்தி கடுக்கன் இட்டு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார் .
இதுபற்றி செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர் செல்லம் மோகனிடம் கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது , நமது சமூகத்திற்கு ஒரு கட்டுப்பாடு நியதி உள்ளது . அதன் பிரகாரம் அவர்களுக்கு எமது சம்பிரதாய முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது .
எமது சமூகத்திற்குள் முறையற்ற விதத்தில் யாரும் நடக்க முற்பட்டால் இதுதான் இனியும் நடக்கும் என்று தெரிவித்தார் .

No comments:

Post a Comment