April 11, 2015

கடும் குடிபோதையில் யாழ் பல்கலைக்கழக 3ம் வருட மாணவர்கள் - மாணவனின் தலையை உடைத்தனர்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பரீட்சை எழுதுவதற்காக சென்றிருந்த மாணவனை 3ஆம் வருட முகாமைத்துவபீட பல்கலைக்கழக மாணவர்கள் பகிடிவதை முறையில் தலைக்கவசத்தால் பின்தலையில் அடித்து உடைத்த சம்பவம் நேற்று மாலை 3மணியளவில் நடைபெற்றுள்ளது.

இம் மாணர்கள் கடும் மது போதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது, குறித்த சம்பவத்தால் ஏனைய பல்கலை மாணவர்களும் பயத்தின் நிமித்தம் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பல்கலைக்கழக மாணவர்கள் என்ற போர்வையில் கடும் கலாச்சாரச் சீர்கேடுகளை யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் செய்து வருவதும் போதைப்பொருள் பாவிப்பதும் தற்போது அதிகரித்துள்ளதாக பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment