April 10, 2015

16 வயது மாணவியைக் கர்ப்பமாக்கினார் யாழ் பல்கலைக்கழக மாணவன்!

யாழ் பல்கலை்ககழகத்தில் கலைப் பிரிவில் கல்வி கற்கும் மாணவன் தன்னிடம் வந்து கல்வி பயின்ற 16 வயது மாணவியைக் கர்ப்பமாக்கியுள்ளார் . மானிப்பாய் பகுதியில் வசிக்கும் குறித்த மாணவனிடம் அவனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் க.பொ.த சா.தரத்தில் கல்வி பயிலும் மாணவிகள் 3 பேர்  அவனது வீட்டில் வந்து அவனிடம் கல்வி கற்று வந்துள்ளனர்.

இந் நிலையில் ஒரு மாணவி கடும் சுகவீனம் உற்று தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவள் கர்ப்பமாக உள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார், இதனையடுத்து பெற்றோர் மேற்கொண்ட விசாரணைகளில் மாணவனே கர்ப்பத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

குறித்த மாணவன் வன்னிப் பகுதியில் தனது பெற்றோரை இழந்து மீண்டும் யாழ் வந்து தனது சித்தியாருடன் வாழ்ந்து வந்ததாகத் தெரியவருகின்றது, குறித்த மாணவியை பெற்றோர் கொழும்பு கொண்டு சென்றுள்ளதாகவும் மாணவியின் கர்ப்பத்திற்கு தானே பொறுப்பு என மாணவன் ஒப்புக் கொண்டு 18 வயதுக்குப் பின் அவளைத் திருமணம் முடிப்பதாக  மாணவியின் பெற்றோருக்கு உறுதியளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment