February 19, 2015

நான்கு சிறிலங்கா அகதிகளை நாடு கடத்தியது அவுஸ்திரேலியா!

சிறிலங்காவில் இருந்து சென்ற நான்கு அகதிகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடுகடத்தியுள்ளது.

குறித்த நான்கு பேரும் படகு ஒன்றின் மூலம் அவுஸ்திரேலியா சென்ற நிலையில், கொக்கோஸ் தீவுக்கு அருகில் வைத்து கைதாகினர்.
அவர்கள் தமிழர்களா அல்லது மாற்று சமூகத்தவர்களா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
அவர்களிடம் நடுக்கடலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் அவர்கள் அகதி அந்தஸ்த்து கோர தகுதியற்றவர்கள் என்று தெரிவித்து, அவுஸ்திரேலிய அதிகாரிகளால் அவர்கள் சிறிலங்காவின் அதிகாரிகளுக்கு பாரப்படுத்தப்பட்டனர்.
கடலில் வைத்து கைதாகும் தருணத்திலேயே விசாரணை நடத்தி நாடுகடத்தும் சட்டத்தின் கீழ் முதல்முறையாக இவ்வாறு நாடுகடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment