February 15, 2015

முதலாவது பயணமாக இந்தியா புறப்பட்டார் மைத்திரி!


நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று காலை இந்தியா சென்றார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ஜனாதிபதியுடன் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன, அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, டி.எம்.சுவாமிநாதன், கிழக்கு மாகாண ஆளுநர் ஓஸ்ரின் பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.அபயக்கோன் ஆகியோரும் இந்தியாவுக்கு சென்றனர். இதேவேளை இந்தக் குழுவினருடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் புதுடில்லியில் இணைந்துகொள்ளவுள்ளார்.

 ms indanms indan 1

No comments:

Post a Comment