February 12, 2015

வடமாகாணசபை பெண் உறுப்பினர் திடீர் ராஜினாமா!

வடமாகாணசபையில் முல்லைதீவை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பின் உறுப்பினரான மேரிகமலாவின் ராஜினாமா கடிதம் தேர்தல்
ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.வெற்றிடமாகும் அவரது இடத்திற்கு வவுனியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையினில் நடராசா என்பவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரியவருகின்றது.
மாகாணசபை தேர்தலில் பெறப்பட்ட போனஸ் ஆசனத்தினை சுழற்சி முறையினில் மாவட்டத்திற்கொருமுறையென பகிர்ந்து கொள்வதென்ற தீர்மானத்தின் அடிப்படையினில் முதலில் முல்லைதீவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மேரிகமலா நியமிக்கப்பட்டிருந்தார்.இவரது நியமனக்காலமான ஒருவருடம் முடிவடைந்ததையடுத்தே தற்போது அடுத்து வவுனியாவிலிருந்து நடராசா நியமிக்கப்படவுள்ளார்.


அதற்கேதுவாகவே மேரிகமலாவின் ராஜினாமா கடிதம் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.Mare

No comments:

Post a Comment