February 23, 2015

ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களை அழைத்து எச்சரிக்கை விடுக்க உள்ளதாக ரணில் அறிவிப்பு!

ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களை அழைத்து எச்சரிக்கை விடுக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

சில சிங்கள ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக செயற்படுகின்றனர்.
புதிய அரசாங்கத்திற்கு எதிராக அவதூறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊடக உரிமை அமைப்புக்கள் ஆகியனவற்றை அழைத்து பேசத் தீர்மானித்துள்ளேன்.
நாடு பிளவடையவுள்ளது, தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைகின்றார்கள் என பொய்யான பிரச்சாரங்களை சில சிங்கள ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இன்று பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment