February 22, 2015

நாற்பது வருடங்களாக கவனிப்பின்றி இருக்கும் மாணிக்க புர பிரதான வீதி!

விசுவமடு பாரதி வித்தியாலயம் முன்பாக ½ ஏக்கர் திட்ட குடியிருப்புக்கு செல்லும் சுமார் ½ கிலோமீற்றர் நீளமான பிரதான வீதியானது 1977ம் ஆண்டு
தொடக்கம் திருத்தம் செய்யப்படாது இருப்பதாகவும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.image_6
குறித்த வீதி 450 க்கும் அதிகமான குடும்பங்களின் நாளாந்தபாவனையில் பலவருடங்களாக திருத்தவேலைகளுக்கு உட்படாது இருப்பதுடன் அங்குள்ள பாலத்திற்கு மரப்பலகையிலான தற்காலிக பாலத்தை செய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.image_1
நாற்பதுவருடங்களாக கவனிப்பின்றி இருக்கும் வவுனியா மாணிக்கபுர பிரதான வீதியை திருத்தம் செய்துதாருங்கள் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




சுமார் 450 குடும்பங்களுக்கும் மேலானவர்கள் இவ்வீதியை நாளாந்தம் பல்வேறு சிரமங்களுக்கும் மத்தியில் பயன்படுத்தி வருவதாகவும் இப்பாதையில் உள்ள மரப்பலகை பாலத்தினால் பாடசாலைசிறார்கள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் அப்பகுதி மக்கள் முறையிட்டுள்ளனர்.
கடந்த 2015-02-02 அன்று வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்களின் வேண்டு கோளுக்கிணங்க குறித்த பகுதியை பார்வையிடச் சென்றபோதே மேற்படி முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

No comments:

Post a Comment