February 12, 2015

துமிந்த சில்வாவிடம் மூன்றாம் நாளாகவும் விசாரணை!

ஐக்கிய மக்கள் சுநத்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் மூன்றாம் நாளாகவும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


துமிந்தவிடம், கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த இரண்டு நாட்களாகவே விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாரியளவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட வெலே சுதாவுடன் இணைந்து செயற்பட்டதாகவும், பணம் பெற்றுக்கொண்டதாகவும் துமிந்த மீது குற்றப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு தினங்களாக சுமார் 12 மணித்தியாலங்கள் துமிந்த சில்வாவிடம் குற்ற புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

நிதிச்சலவை மேற்கொண்டதாகவும் துமிந்த சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment