February 19, 2015

ஐ.நா அறிக்கையை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வேண்­டு­மென எதிர்வரும் 24ம் திகதி நாடுகள் வாரியாக போராட்டங்கள்!

இலங்­கையில் இடம்­பெற்ற இன அழிப்புத் தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட்ட போர்க் குற்ற விசா­ரணை அறிக்கை மார்ச் மாதம் நடைபெறவிருக்கும்  ஐ.நா. மனித உரிமை அமர்வில் கண்­டிப்­பாக சமர்ப்­பிக்­கப்­ப­டு­மென எதிர்பார்ப்பு தமிழ் மக்­கள்  மத்தியில் நிலவியிருந்தது.

இருப்­பினும் இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள ஆட்சி மாற்றம் உள்­ளிட்ட சில விட­யங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இலங்கை தொடர்­பான அறிக்­கையை வெளி­யி­டு­வதை மேலும் ஆறு மாதம் ஒத்­தி­வைக்க ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் முடி­வெ­டுத்­துள்­ள­தாகக் கூறப்­ப­டு­கின்­றது.

அந்தவகையில் ஐ.நா.வின் விசாரணை அறிக்­கையை கண்­டிப்­பாக மார்ச்  இல் நடைபெற இருக்கும் ஐ.நா. மனித உரிமை அமர்வில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வேண்­டு­மென எதிர்வரும் 24.02.2015 தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் முனெடுக்கப்படுகின்றது .காலத்தின் தேவை கருதி அனைத்து மக்களும் இப் போராட்டங்களில் கலந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம் .

அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை (ICET)



No comments:

Post a Comment