கோழிக்குஞ்சு தருவதாக கூறி அழைத்துச் சென்று குடும்பப் பெண் ஒருவரை 3
நாட்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் காரைநகா்ப் பகுதியில்
இடம்பெற்றுள்ளது.
காரைநகா் ஆதிகோவிலடியைச் சோ்ந்த குடும்பப் பெண்ணான 32 வயதுடைய மகேந்திரராஜா மிதுனா என்ற பெண்ணுக்கே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கோழிக்குஞ்சு தருவதாக குறித்த பெண்ணை இன்னொரு பெண் அழைத்துச் சென்றே கட்டிவைத்து 3 நாட்களாக தொடா்ச்சியான தாக்குதலை நடாத்தியுள்ளாா்.
மயங்கிய நிலையில் வட்டுக் கோட்டைப் பகுதியில் வீதியோரத்தில் கிடந்த பெண்ணை பொதுமக்கள் வைத்தியசாலைக்குச் சோ்த்த போது இவருக்கு நடந்த செயல் தெரியவந்துள்ளது.
குறித்த பெண் எதற்காகத் தாக்கப்பட்டாா்? தாக்கிய பெண் யாா் என்பது தொடா்பாக பொலிசாா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனா்.
காரைநகா் ஆதிகோவிலடியைச் சோ்ந்த குடும்பப் பெண்ணான 32 வயதுடைய மகேந்திரராஜா மிதுனா என்ற பெண்ணுக்கே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கோழிக்குஞ்சு தருவதாக குறித்த பெண்ணை இன்னொரு பெண் அழைத்துச் சென்றே கட்டிவைத்து 3 நாட்களாக தொடா்ச்சியான தாக்குதலை நடாத்தியுள்ளாா்.
மயங்கிய நிலையில் வட்டுக் கோட்டைப் பகுதியில் வீதியோரத்தில் கிடந்த பெண்ணை பொதுமக்கள் வைத்தியசாலைக்குச் சோ்த்த போது இவருக்கு நடந்த செயல் தெரியவந்துள்ளது.
குறித்த பெண் எதற்காகத் தாக்கப்பட்டாா்? தாக்கிய பெண் யாா் என்பது தொடா்பாக பொலிசாா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனா்.
No comments:
Post a Comment