August 13, 2014

புலிப்பார்வை, கத்திக்கு எதிரான போராட்டங்களைத் தொடங்கவுள்ளோம் - த.பெ.தி.க அறிவிப்பு!

சிங்களவன் தமிழ்நாட்டில் எந்தத் துறையில் நுழைந்தாலும் அது திரைப்படத்துறை என்றாலும் சரி, வியாபாரத்துறை என்றாலும் சரி அதனை தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது. அதனை முளையிலேயே கிள்ளி எறியும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் இராமகிருட்டிணன் கூறியுள்ளார்.

தமிழீழ மக்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள புதிய இளைஞர்கள் தமிழீழத்தை உணர்ந்து, புரிந்து, சரியான ஆதரவைக் கொடுப்பதற்கு இளைஞர்கள் முன்வந்திருக்கிறார்கள்.

கத்தி மற்றும் புலிப்பார்வை திரைப்படத்திற்கு எதிரான கடுமையான போராட்டங்களை தமிழ்நாட்டில் தொடங்குவோம். இத்திரைப்படங்களுக்கு எதிராக யார் போராடினாலும் அவர்களுக்கு ஆதரவை வழங்குவோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment