May 20, 2014

மன்னார் நானாட்டானில் ஒரு பிள்ளையின் தாய் வெட்டிக்கொலை-கணவன் தலைமறைவு (Photos)

மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுககுற்பட்ட கரிக்கா முறிப்பு கிராமத்தை வதிவிடமாகக்
கொண்ட 1 வயது குழந்தையின் தாயான ராமநாதன் வசந்தி(வயது-31) நேற்று திங்கட்கிழமை மாலை வீட்டில் வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்திய வம்சாவழியான குறித்த குடும்பத்தினர் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ‘கரிக்கா முறிப்பு’ கிராமத்தில் வசித்து வந்துள்ளனர்.

கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி சண்டை இடம் பெறுவதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று(19) திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் குறித்த இளம் குடும்பப்பெண் அவருடைய வீட்டில் வைத்து கழுத்துப்பகுதியில் வெட்டி
கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தை கண்ட அயலவர்கள் கிராம சேவகருக்கு தகவழ் வழங்கிய நிலையில் கிராம சேவையாளர் முருங்கன் பொலிஸாருக்கு தகவழ் வழங்கினார்.

-உடனடியாக முருங்கன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரனைகளை மேற்கொண்டனர்.எனினும் குறித்த பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று(20) செவ்வாய்க்கிழமை காலை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரனைகளை மேற்கொண்டதோடு சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உற்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சடலம் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.மேலதிக விசாரனைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment