May 16, 2014

தொலைபேசி மூலம் வந்த வினை: தாயைக் கட்டி வைத்து மகள் மீது வல்லுறவு!

தொலைபேசி மூலம் ஏற்பட்ட தொடர்பால் திருகோணமலையைச் சேர்ந்த பெண்ணொருவர், நுவரெலியாவில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை - அம்பலபுற பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் (வயது 35 ) நீண்டகாலமாக தொலைபேசி மூலம் நபர் ஒருவருடன் பேசி வந்துள்ளார்.
இந்த தொடர்பின் காரணமாக, கடந்த செவ்வாய்கிழமை இப்பெண் தனது தாயுடன் சந்தேகநபரை சந்திக்க நுவரெலியாவுக்கு வருகை தந்துள்ளார்.
தான்,  தாயுடன் நுவரெலியாவுக்கு வந்துள்ளதை சந்தேக நபருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த நபர் இவர்களை அங்கிருந்து முச்சக்கரவண்டியில் அழைத்து சென்ற வேளையில் கந்தப்பளை - கொங்கோடியா மேற்பிரிவு காட்டுப் பகுதியில் வண்டியை நிறுத்தி பெண்ணின் தாயை கட்டி வைத்து அப்பெண்ணை வல்லுறவுக்குட்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை தேடும் பணியில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.
தலைமறைவாகியுள்ள சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment